ஒருவாறு மலையின் அடிவாரத்துக்கு வந்து குயின்ஸ்டவுன் நோக்கி பிரயாணித்தேன். பிரயாணிக்கும் பாதையும் குன்றுகள், மலைகளின் ஊடாக வளைந்து வளைந்து செல்லும் வீதியாகவே இருந்தது. மிகவும் அவதானமாகப் பயணித்தோம்.
சில நிமிடப்பயணங்களின் முடிவில் தூரத்தில் கட்டிடங்கள் தெரிவது அவதானிக்கக்கூடியதாக இருந்தது. மலைப்பிரதேசத்தில் இருந்து பிரயாணிக்கும் போது தூரத் தெரியும் கட்டிடங்கள் உள்ள பகுதிதான் குயின்ஸ்டவுன்.
மலையில் இருந்து பாக்கும் போது தெரிந்த குயின்ஸ்டவுன், மலையை விட்டு இறங்கியதும் தெரியவில்லை.
குயின்ஸ்டவுனை நோக்கிப் பிரயாணிக்க மேலும் 20 நிமிடங்கள் தேவைப்பட்டது. குயின்ஸ்டவுனை அடைய மாலை 6 மணியாகிவிட்டது. குயின்ஸ்டவுனில் தான் கிறைஸ்சேர்ச்சை விட்டு வெளிக்கிட்டபின்பு அதிகளவு கட்டிடங்கள், வாகனங்கள், மனிதர்களைக் காணக்கூடியதாக இருந்தது. மற்றைய இடங்கள் இரவு ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் இடங்களைப் போல அமைதியாகவே இருந்தன. ஆனால் குயின்ஸ்டவுனில் கடைகளும், உணவகங்களும் இரவு நேரத்திலும் திறந்து திருவிழா போலக் காட்சியளித்தன. கிரைஸ்சேர்ச்சசை விட்டு வெளிக்கிட்டபின்பு கிறைஸ்சேர்சுக்கு அடுத்தபடியாக அதிக வீதிகளை குயின்ஸ்டவுனில் தான் நான் பார்த்தேன். படத்தில் இருப்பது குயின்ஸ்டவுனின் வரைபடம்.

குயின்ஸ்டவுனைவிட மற்றைய இடங்கள் மிகவும் சிறியவை.கிறைஸ்சேர்ச் தான் மிகவும் பெரியது.
No comments:
Post a Comment