சமுத்திரத்துடன் ஆறு சந்திக்கும் இடத்துக்கு முன்பாக இருக்கும் ,ஆற்றில் நாங்கள் போகும் திசைக்கு வலப்பக்கத்தில் உள்ள Warieka என்ற கிராமத்தில் படகு சென்று நிக்க நாங்கள் எல்லோரும் படகை விட்டு அங்கே இறங்கினோம். அங்கே ஒலையினால் வேயப்பட்ட ஆடைகள் அணிந்த இரு பெண்களும் ஒரு ஆணும் எங்களை வர வேற்கக் காத்திருந்தார்கள்.
இறங்கியதும் அப்பெண்களில் ஒருவர் எங்களின் தலையில் இலைகளினால் வேயப்பட்ட வட்ட வடிவமான வலையத்தினை அணிவித்தார். அவ்வலையத்தில் செவ்வரத்தம் பூவும் இருந்தது. அதன்பிறகு குடிப்பதற்கு செவ்விளனீரை வெட்டி இளனீர் தந்தார்கள்.
பிறகு அருகில் உள்ள பசுபிக்கடலில் மீன்களுக்கு அவர்கள் உணவு வீச பல மீன்கள் அவ்வுணவை உண்டன.
அதன் பிறகு 59 கிலோகிராம் உள்ள ஒரு பெரிய கல்லினைத் தூக்கி கடலில் வீசச் சொன்னார்கள். மிகவும் பாரமாக இருந்தது. ஒருவரும் தூக்கவில்லை.
அவர்களில் இருவர் சேர்ந்து அக்கல்லைத் தூக்கி கடலில் வீசினார்கள்.
கடலில் விழுந்த அந்த பெரிய கல் கடலில் மிதந்தது.
அதே இனத்தினச் சேர்ந்த சிறு கற்களினை அக்கடலில் எறியும் போது அக்கற்கள் மிதக்கவில்லை. கடலில் மிதந்த அந்தப் பெரிய கல் ஆபூர்வ சத்தி வாய்ந்ததாக அவர்கள் சொன்னார்கள். 59 கிலோ நிறை உள்ள அந்தக்கல் சுவாசிக்கும் தன்மை உடையது என்றும் சொன்னார்கள்.
அதன்பிறகு நாங்கள் ஒன்றையடிப்பாதையினூடாக நடக்க, சில நிமிடங்களில் அங்கே நாங்கள் வந்த கூண்டுந்து(van) நின்றதைக் கண்டோம். வாகன ஒட்டி படகில் வரவில்லை. அவர் வேறு பாதையினால் அவ்விடத்துக்கு வந்தார். 59 கிலோ கல் அமைந்துள்ள மிகவும் பெரிய காணி அந்த வாகன ஒட்டியின் குடும்பத்தாருடையது என அறிந்தோம்.
எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.
Monday, September 29, 2008
Tuesday, September 23, 2008
வனுவாட்டு - பகுதி17 Eboule ஆற்றில் வள்ளத்தில் பயணம்
ஈவெட்(Efate) தீவைச் சுற்றி ஒரு நாள் பயணத்தின் போது Beachcomberல் மதிய உணவு உண்டும், கடலிழும், நீர் நிலையிலும் நீந்திய பின்பு மீண்டும் பயணித்து எங்களது வாகனம் Eboule ஆற்றுப்ப்பாலத்தினை(River Bridge ) அடைந்தது.
பாலத்தின் கீழே ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருந்தது.
வனுவாட்டில் எப்பொழுது பார்த்தாலும் ஆறுகளிலும் , நீர் நிலைகளிலும் குளித்துக் கொண்டிருப்பவர்களைக் காணலாம். இந்த Eboule ஆற்றிலும் சிறுவர்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள்.
ஆற்றில் வனுவாட்டு மரம் ஒன்றினால் செய்யப்பட்ட வள்ளம்(Canoe) ஒன்றினை ஒருவர் நாங்கள் இருந்த கரைக்கு ஒட்டி வந்தார்.
வள்ள ஒட்டியை விட எங்களில் 9பேர் இருந்தோம். இதனால் இன்னொரு வள்ளமும் வர, எங்களில் அதிக நிறை கூடிய நான்கு பேரை ஒரு வள்ளத்திலும், மற்றைய ஐந்து பேரை மற்றைய வள்ளத்திலும் ஏற்றினார்கள்.
வள்ளத்தில் ஒரு பக்கத்தில் ஒருவர் இருந்தால், அடுத்தவர் அவருக்கு எதிர்த்திசையில் மாறி இருந்தவாறே செல்ல வேண்டும். எங்கள் வள்ளம் முதலில் சென்றது. எனது வள்ளத்தில் இருந்து மற்றைய வள்ளத்தில் இருப்பவர்களினைப் புகைப்படக்கருவியினால் எடுத்தபடத்தினைக் கீழே காண்கிறீர்கள்.
இயற்கைக்காட்சிகளைப் பார்த்தவாறே பயணித்தேன்.
கிட்டத்தட்ட 15 நிமிடப்பயணத்தின் பின்பு, அந்த ஆறு பசுபிக் சமுத்திரத்துடன் சேருவதைக் காணக்கூடியதாக இருந்தது.
பாலத்தின் கீழே ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருந்தது.
வனுவாட்டில் எப்பொழுது பார்த்தாலும் ஆறுகளிலும் , நீர் நிலைகளிலும் குளித்துக் கொண்டிருப்பவர்களைக் காணலாம். இந்த Eboule ஆற்றிலும் சிறுவர்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள்.
ஆற்றில் வனுவாட்டு மரம் ஒன்றினால் செய்யப்பட்ட வள்ளம்(Canoe) ஒன்றினை ஒருவர் நாங்கள் இருந்த கரைக்கு ஒட்டி வந்தார்.
வள்ள ஒட்டியை விட எங்களில் 9பேர் இருந்தோம். இதனால் இன்னொரு வள்ளமும் வர, எங்களில் அதிக நிறை கூடிய நான்கு பேரை ஒரு வள்ளத்திலும், மற்றைய ஐந்து பேரை மற்றைய வள்ளத்திலும் ஏற்றினார்கள்.
வள்ளத்தில் ஒரு பக்கத்தில் ஒருவர் இருந்தால், அடுத்தவர் அவருக்கு எதிர்த்திசையில் மாறி இருந்தவாறே செல்ல வேண்டும். எங்கள் வள்ளம் முதலில் சென்றது. எனது வள்ளத்தில் இருந்து மற்றைய வள்ளத்தில் இருப்பவர்களினைப் புகைப்படக்கருவியினால் எடுத்தபடத்தினைக் கீழே காண்கிறீர்கள்.
இயற்கைக்காட்சிகளைப் பார்த்தவாறே பயணித்தேன்.
கிட்டத்தட்ட 15 நிமிடப்பயணத்தின் பின்பு, அந்த ஆறு பசுபிக் சமுத்திரத்துடன் சேருவதைக் காணக்கூடியதாக இருந்தது.
Thursday, September 04, 2008
வனுவாட்டு - பகுதி16 -Beachcomber
மதியம் 1 மணி ஆக எல்லோருக்கும் நல்ல பசி. எங்கள் வாகனம் Beachcomber என்ற இடத்தை அடைந்தது. ஈவெட் தீவைச்சுற்றி ஒருநாள் பயணம் என்ற இச்சுற்றுலாவை நடாத்தும் அவுஸ்திரெலியாக்காரரின் சொந்தமான விடுதியான Beachcomber lodgeம் அங்குதான் இருந்தது. நாங்கள் உண்பதற்கு உணவு அங்கே தயார் செய்யப்பட்டிருந்தது.
நாங்கள் அங்கே செல்ல, வரவேற்புக் கீதங்களினை இசைக்கருவிகளின் உதவியுடன் பாடி எங்களை வரவேற்றார்கள்.
எல்லோருக்கும் பசித்திருந்தாலும், அங்கே இருந்த மூன்றுவகை வெப்பனிலையில் உள்ள நீர்நிலைகளினைக் கண்டதும், பசியினை மறந்து அதில் நீந்தச் சென்றோம்.
குளித்துவிட்டு மதிய உணவு உண்ணச்சென்றோம். மீன், இறால் உட்பட பலவிதமான கடல் உணவுகளுடன், மரக்கறி உணவுகள், கோழிக்கால்கள், மாட்டிறச்சி என சோற்றுடன் உணவுகள் அங்கே இருந்தன. இதை விட இத்தாலி நாட்டின் உணவுகளும் அங்கே இருந்தன. விருப்பமானவற்றினை உண்டபின்பு, வாழை இலையில் இருந்த சிறு துண்டுகளாக்கப்பட்ட வெவ்வேறு விதமான பழங்களினை உண்டோம். அதன்பிறகு சுவையான குளிர்களி எல்லோருக்கும் வழங்கப்பட்டது. சாப்பிட்டதும் சிலர் மீண்டும் நீர் நிலைகளில் நீந்தச்சென்றார்கள். சிலர் கடலில் சிறு படகில் சென்றார்கள். நான் கடலில் முருகைக்கல் போன்ற கூரிய கற்கள் இருந்ததினால், அவதானித்து கவனமாகச் சென்று கடலில் குளித்தேன்.
கடற்கரையில் பல உயிர் உள்ள சோகிகளும், சங்குகளும் ஊர்ந்து திரிவதினைக் காணக்கூடியதாக இருந்தது.
குளித்தபின்பு எங்கள் வாகன ஓட்டி, வனுவாட்டு மக்கள் விரும்பி உண்ணும் தேங்காய் நண்டினைப்(Coconut Crabs) பற்றி விளக்கம் தந்தார்.
நண்டின் பின்பக்கத்தில் பிடித்துத் தூக்க வேண்டும். இந்நண்டினைத் தூக்கி பாருங்கள் என்று எங்களிடம் அவர் சொல்ல, கடித்துவிடும் என்ற பயத்தில் நாங்கள் ஒருவரும் நண்டுக்குக் கிட்டச் செல்லவில்லை.
வனுவாட்டில் பல இடங்களில் மனித உறுவில் செய்யப்பட்ட கறுத்த நிறமுடைய, தலைப்பகுதி பெரிதாகவுள்ள ஒரே மாதிரியான சிலைகளைக் கண்டேன்.இச்சிலையினை Beachcomberவிலும் கண்டேன். இச்சிலைகள் முன்பு வாழ்ந்த கிராமத் தலைவர்களினைக் குறிக்கும் என அறிந்தேன்.
நாங்கள் அங்கே செல்ல, வரவேற்புக் கீதங்களினை இசைக்கருவிகளின் உதவியுடன் பாடி எங்களை வரவேற்றார்கள்.
எல்லோருக்கும் பசித்திருந்தாலும், அங்கே இருந்த மூன்றுவகை வெப்பனிலையில் உள்ள நீர்நிலைகளினைக் கண்டதும், பசியினை மறந்து அதில் நீந்தச் சென்றோம்.
குளித்துவிட்டு மதிய உணவு உண்ணச்சென்றோம். மீன், இறால் உட்பட பலவிதமான கடல் உணவுகளுடன், மரக்கறி உணவுகள், கோழிக்கால்கள், மாட்டிறச்சி என சோற்றுடன் உணவுகள் அங்கே இருந்தன. இதை விட இத்தாலி நாட்டின் உணவுகளும் அங்கே இருந்தன. விருப்பமானவற்றினை உண்டபின்பு, வாழை இலையில் இருந்த சிறு துண்டுகளாக்கப்பட்ட வெவ்வேறு விதமான பழங்களினை உண்டோம். அதன்பிறகு சுவையான குளிர்களி எல்லோருக்கும் வழங்கப்பட்டது. சாப்பிட்டதும் சிலர் மீண்டும் நீர் நிலைகளில் நீந்தச்சென்றார்கள். சிலர் கடலில் சிறு படகில் சென்றார்கள். நான் கடலில் முருகைக்கல் போன்ற கூரிய கற்கள் இருந்ததினால், அவதானித்து கவனமாகச் சென்று கடலில் குளித்தேன்.
கடற்கரையில் பல உயிர் உள்ள சோகிகளும், சங்குகளும் ஊர்ந்து திரிவதினைக் காணக்கூடியதாக இருந்தது.
குளித்தபின்பு எங்கள் வாகன ஓட்டி, வனுவாட்டு மக்கள் விரும்பி உண்ணும் தேங்காய் நண்டினைப்(Coconut Crabs) பற்றி விளக்கம் தந்தார்.
நண்டின் பின்பக்கத்தில் பிடித்துத் தூக்க வேண்டும். இந்நண்டினைத் தூக்கி பாருங்கள் என்று எங்களிடம் அவர் சொல்ல, கடித்துவிடும் என்ற பயத்தில் நாங்கள் ஒருவரும் நண்டுக்குக் கிட்டச் செல்லவில்லை.
வனுவாட்டில் பல இடங்களில் மனித உறுவில் செய்யப்பட்ட கறுத்த நிறமுடைய, தலைப்பகுதி பெரிதாகவுள்ள ஒரே மாதிரியான சிலைகளைக் கண்டேன்.இச்சிலையினை Beachcomberவிலும் கண்டேன். இச்சிலைகள் முன்பு வாழ்ந்த கிராமத் தலைவர்களினைக் குறிக்கும் என அறிந்தேன்.
Subscribe to:
Posts (Atom)