எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.



Wednesday, October 22, 2008

வனுவாட்டு - பகுதி19 -இவெட் தீவின் கிழக்கு, தெற்குப் பகுதியில் உள்ள சில கிராமங்கள்


அடுத்ததாக வாகனத்தில் நாங்கள் என்ற Pang Pang Village கிராமத்தினூடாகச் சென்றோம். இக்கிராமத்தில் இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா இராணுவம் சுடுகலன்களினால் சுட்டு பயிற்சிகளினை மேற்கொண்டார்கள். சுடுகலன்கள் வெடிக்கும் போது 'Pang' 'Pang' என்று சத்தம் கேட்பதினால் அக்கிராமத்திற்கு Pang Pang என்ற பெயர் ஏற்பட்டது.இக்கிராமம் ஈவெட் தீவின் தென் கிழக்கில் அமைந்துள்ளது.

Pang Pangற்கு அடுத்ததாக உள்ள இடம் Forari. இங்கே உள்ள கண்ணிவெடியை, இப்பொழுதும் அமெரிக்காவில் "Mile a Minute Vines"என்ற பகுதியில் காணலாம். இந்தக்கண்ணி வெடியினை 2ம் உலகப்போரின் போது அமெரிக்காப்படைகள் வனு-அற்றில் இந்த இடத்தில்(Forari) உபயோகித்தார்கள். இக்கண்ணிவெடி பச்சோந்தியினைப் போல உருவமாற்ற மடையக்கூடியது(Camouflage).
Forari க்கு அருகில் உள்ள ' Le Cresionaire Farm ' என்ற இடத்தினைக் கடந்து செல்லும் போது சிறிய நீர்வீழ்ச்சி(Mini Cascades) ஒன்று பாலத்தின் அடியில் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தோம். அந்த நீர் நிலையில் குளித்துக் கொண்டு எங்களுக்கு கை காட்டிக் கொண்டிருப்பவர்களை கீழே உள்ள படத்தில் காணலாம்.

அடுத்து வருகிற கிராமம் 'Eton Village'. இங்கே உள்ள வீடுகளில் பெரும்பாலானவை வனுவாட்டில் கிடைக்கப்படும் மூங்கில்களினால் வேயப்பட்ட சுவர்களினை உடையதாகவும் , மேற்ப்பகுதி 'Natangoora' என்ற இடத்தில் செய்யப்பட்ட கூறைகளைக் கொண்டதாகவும் இருக்கிறது.

வனுவாட்டு மக்கள் மரத்தினால் செய்யப்பட்ட படகில் சில ஆறுகளில் பயணம் செய்கிறார்கள்.

அடுத்ததாக எங்களது வாகனம் Banana Bay என்ற இடத்தில் நிற்க எங்களுக்கு உண்பதற்கு பழங்களும் குளிர்பானங்களும் தந்தார்கள். நான் போன எல்லா இடங்களிலும் வெட்டப்பட்ட பழங்களை வாழையிலையில் வைத்திருந்து இன்னொரு வாழை இலையினால் மூடப்பட்டிருப்பதைக் கண்டேன். வனுவாட்டில் இலையான்களின் தொல்லை அதிகம் என்பதினால் பழங்களை வாழை இழையினால் மூடுகிறார்கள்.
Banana Bay இல் இருந்து வெளிக்கிட்ட எமது வாகனம் அரை மணித்தியாலத்தில் எங்கள் விடுதியை அடைந்தது. காலை 9 மணிக்கு ஆரம்பமாகிய இவெட் தீவைச்சுற்றும் பயணம் மாலை 5 அரை மணிக்கு முடிவடைந்தது.
இப்பயணத்தின் போது ஒவ்வொரு கிராமங்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொண்டும் பயணித்தோம். விதிகளில் செல்லும் போது வித்தியாசமான மரங்களினால் அமைக்கப்பட்ட வேலிகள்,தென்னந்தோட்டங்கள், மாட்டுப்பண்ணைகள், நீர்னிலைகள், ஆலமரங்களினை அதிகளவில் கண்டோம்.


No comments: