நான் ஈழத்தில் பிறந்து தற்பொழுது சிட்னியில் வசிக்கிறேன்.
யாழ் இணையத்தளத்தில், நான் பயணித்த வனுவாட்டு என்ற அழகிய நாடு பற்றி புகைப்படங்களுடன் 2006ல் இருந்து 2007 வரை பதிவுகளை எழுதி வந்தேன். நண்பர் கானாபிரபா அவர்கள் என்னை இப்பதிவினை தனியான வலைப்பதிவில் இட்டால் நன்றாக இருக்கும் என்று ஆலோசனை சொன்னார். யாழ்கள உறவு சின்னக்குட்டி அவர்கள் தமிழ்மணத்திலும் எனது பதிவுகள் வரவேண்டும் என்றார். 2006ல் வலைப்பதிவினை ஆரம்பித்தாலும் தொடர்ந்து பதிவுகள் நான் எழுதவில்லை. யாழ் இணையத்தளத்தில் மட்டுமே எழுதினேன். திடிரென்று யாழ் இணையத்தளத்தில் நான் எழுதிய பயணக்கட்டுரைகளை எனது வலைப்பதிவில் இடலாம் என்று எனக்கு யோசனை தோன்றியது.இதுவரை நான் வனுவாட்டு சுற்றுலா பற்றி 3 பதிவுகளை இட்டுள்ளேன். தமிழ்மணத்தில் எனது பதிவினை வருவதற்கு ஆலோசனை, உதவிகள் செய்த தூயா அவர்களுக்கும் நன்றி.
17 comments:
வருக வருக :)
வாங்கோ வாங்கோ ;-)
இடையில் நிப்பாட்டாமல் தொடருங்கோ
என்னை வரவேற்றதற்கு நன்றிகள் தூயா, பிரபா.
வருக வருக என வரவேற்கிறேன். உங்கள் பயணக் கட்டுரைகளை தொடர்ந்து தருக !
வரவேற்ற மணியனுக்கு நன்றிகள்
நல்வரவு அரவிந்தன்.
தமிழ் ஜோதியில் ஐக்கியமாகிட்டீங்க!
வாழ்த்து(க்)கள்.
வரவேற்றதற்கு நன்றிகள் துளசி கோபால்.
நல்வரவு அரவிந்தன்.
வரவேற்றதற்கு நன்றிகள் கயல்விழி
எம் ஈழத்து உறவே, உம் வரவு நல்வரவாகுக. நல்ல பல காவியங்கள் படைக்க வாழ்த்துக்கள்.
வரவேற்ற பால்ராஜ் அவர்களுக்கு நன்றிகள்.
நல்வரவு!
வரவேற்றதற்கு நன்றிகள் ஜோ.
வாழ்த்துகள் அரவிந்தன்..
வரவேற்றதற்கு நன்றிகள் டொன் லீ
யாழில உங்கட பதிவுகளைப் பார்க்கிறனான்.
நீங்கள் யாழில கருத்துக்களை எழுதுவதுண்டா வியாசன்?. வியாசன் என்ற பெயரில் முன்பு யாழில் எழுதுகிறவர் நீங்களா?
Post a Comment